மகாராட்டிராவில் பாஜக கூட்டணி மோதல் அமித்ஷாவிடம் ஏக்நாத் ஷிண்டே புகார் அளித்தாரா? அவரே அளித்த பதில்

1 Min Read

மும்பை, நவ.27 மாநில பாஜக தலைவர்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தான் புகார் அளிக்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். மகாராட்டிராவில் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியிடையே சமீப காலமாகத் தொடர்ந்து சலசலப்புகள் இருந்து வந்தன. குறிப்பாக கல்யாண்-டோம்பிவிலி பகுதியில் சிவசேனா நிர்வாகிகளை பாஜக தங்கள் பக்கம் இழுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகத் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுடன் பேசி, இனி இரு கட்சிகளும் பரஸ்பரம் நிர்வாகிகளை இணைக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே டில்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ‘அடிவாங்கிய சிறுபிள்ளை போல அழுதுகொண்டு ஷிண்டே டில்லிக்கு ஓடுகிறார்’ என உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்தச் சூழலில், தனது டில்லி பயணம் மற்றும் உட்கட்சி பூசல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் டெல்லிக்குச் சென்று புகார் அளிக்கும் நபர் அல்ல; நான் ஒரு போராளி. மாநிலத் தலைவர்கள் மீதான அதிருப்தியை டில்லியில் முறையிட்டதாகக் கூறுவது தவறானது. அனைத்தும் ஊடகங்கள் உருவாக்கிய கற்பனையே’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், ‘கூட்டணிக்குள் எழும் சிறு பிரச்சினைகளை நாங்கள் மாநில அளவிலேயே பேசித் தீர்த்துக்கொள்வோம். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கும், புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுமே டில்லி சென்றேன்’ என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாஜகவின் தீவிர கட்சிப் பணிகள் குறித்து அவர் அமித்ஷாவிடம் கவலை தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *