பெரியார் பற்றாளர் ஜெ.சி.முருகன் மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

1 Min Read

பருகூர், நவ. 27- பெரியார் பற்றாளர் கிருட்டினகிரி ஜெ.சி.முருகன் மறைவு – கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத் தினர்.

கிருட்டினகிரி மாவட்டம் பருகூர் ஒன்றியம் ஜெகதேவி கிராமத்தை சேர்ந்த பணி நிறைவுப் பெற்ற வட்டாட்சியரும் தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர் சிந்தனையாளரும் கிருட்டினகிரி நகரில் பெரியார் மய்ய கட்டடம் இரண்டு தளம் மோல்டு அமைக்கலாம் என்ற பெரும் தன்நம்பிக்கையை கழக நிர்வாகிகளுக்கு ஊட்டிய வட்டாட்சியர் (ஓய்வு) ஜெ.சி.முருகன் அவர்கள் உடல்நல குறைவால் 25/11/2025-பகல் 12.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அன்னாரது மறைவு செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 26/11/2025 – காலை 11.30 மணியளவில்  மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர்கள் வ. ஆறுமுகம், கு.முத்துசாமி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, நகரத் தலைவர் கோ.தங்கராசன் மற்றும் கழகத் தோழர் களுடன் சென்று ஜெகதேவி அவரது இல்லத்தில் அன் னாரது உடலுக்கு மாலை அணிவித்து  திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *