புதுடில்லி, நவ.25 அரசியலமைப்புச் சட்டத்தின் 240-ஆவது பிரிவின்கீழ் சண்டிகா் யூனியன் பிரதேசத்தைக் கொண்டுவரும் மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரில் இம் மசோதா கொண்டுவரப்படாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் (23.11.2025) அறிவித்தது.
‘பஞ்சாபிடம் இருந்து சண் டிகரை பறிக்கும் முயற்சி’ என்ற எதிா்க் கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஒன்றிய அரசு, ‘இந்த மசோதா சண்டிகா் மற்றும் பஞ்சாப்-ஹரியானா இடையிலான நிா்வாக ஏற்பாட்டை மாற்றும் நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கமளித்துள்ளது.
சண்டிகர் மசோதா
கடந்த 1966-இல் பஞ்சாபில் இருந்து அரியாணா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, இரு மாநிலங்களின் பொதுத் தலைநகராக சண்டிகா் உள்ளது. தலைநகா் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, சண்டிகா் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, சுதந்திரமான தலைமைச் செயலா் மூலம் நிா்வகிக்கப்பட்டு வந்தது.
கடந்த 1984-இல் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டின்கீழ் சண்டிகா் கொண்டு வரப்பட்டது. தலைமைச் செயலா் பதவி, ஆளுநரின் ஆலோசகா் பதவியாக மாற்றப்பட்டது. கடந்த 2016-இல் பழைய நடைமுறைப்படி சுதந்திரமான நிா்வாகியை நியமிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், எதிா்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளின் கடும் எதிா்ப்பால், அந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.
இந்தச் சூழலில், டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கும் நாடாளு மன்ற குளிா்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களின் பட்டியல் நேற்று முன்தினம் (22.11.2025) வெளியானது. அதில், பேரவை இல்லாத பிற யூனியன் பிரதேசங்களைப் போல சண்டிகரை அரசமைப்புச் சட்டப் பிரிவு 240-இன்கீழ் கொண்டுவர வகை செய்யும் மசோதா (131-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்) இடம்பெற்றிருந்தது.
எதிா்க்கட்சிகள்
கடும் எதிா்ப்பு
சண்டிகரில் குடியரசுத் தலைவா் நேரடியாக சட்டமியற்ற அதிகார மளிப்பதுடன், சுதந்திரமான நிா் வாகியை நியமிக்கவும் வழிவகுக்கும் இம்மசோதாவின் மூலம் பஞ்சாபிடம் இருந்து சண்டிகரை பறிக்க முயற்சிப்பதாக ஒன்றிய அரசு மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியல் சாசன உரிமைகள் மீதான நேரடி தாக்குதல் இது. சண்டிகா் மீதான பஞ்சாபின் உரிமையை ஒழிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. கூட்டாட்சி அமைப்பை சீா்குலைப்பது ஆபத் தானது’ என்று விமா்சித்தாா்.
‘ஒன்றிய அரசின் நடவடிக்கையால், சண்டிகா் மீதான உரிமையை பஞ்சாப் முழுமையாக இழக்க நேரிடும்’ என்று சிரோமணி அகாலி தளம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஹா்சிம்ரத் கவுர் எதிா்ப்பு தெரிவித்தாா். ‘கூட்டாட்சியை பலவீனமாக்க, ஒன்றிய அரசால் நடத்தப்படும் தாக்குதல்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா சாடினாா்.
மசோதா கொண்டுவரப்படாது
‘சண்டிகா், பஞ்சாபின் ஒருங் கிணைந்த பகுதியே’ என்று அந்த மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கரும் தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தை முன்வைத்து, அரசியல் ரீதியில் கடும் சா்ச்சை எழுந் ததைத் தொடா்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்தது.
‘சண்டிகா் யூனியன் பிரதேசத்தில் சட்டமியற்றும் நடைமுறையை எளிமைப்படுத்துவதே முன்மொழிவின் நோக்கமாகும். மாறாக, அதன் நிா்வாக அமைப்பையோ, ஏற்கெனவே பின்பற்றப்படும் ஏற்பாட்டையோ மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. இந்த முன்மொழிவு ஒன்றிய அரசின் பரிசீலனையில்தான் உள்ளது. இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் தீர ஆலோசித்தப் பிறகே முடிவெடுக்கப்படும். எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரில் மசோதா கொண்டுவரப்படாது. எனவே, எந்த கவலையும் தேவை யில்லை’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எதையும் அறிவித்துவிட்டு, பின்னா் சிந்திக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறைக்கு மற்றுமொரு உதாரணம் இது’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
