தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி மேனாள் அமைப்பாளரும், பணி நிறைவு பெற்ற ஆசிரியரும், தனது இறப்புக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உடற்கொடையாக வழங்கியவருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 26.11.2025 அன்று ஏழாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் உணவிற்காக ரூ.3000 நன்கொடையை இணையர் மா.பால்ராசேந்திரம் மற்றும் மகன் வழக்குரைஞர் பா.இராசேந்திரன் வழங்கினர்.
