இன்றைக்கு நாட்டை ஆளுகின்ற பிஜேபி ஒன்றிய அரசு நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்கிறது. மக்களுக்கு பகுத்தறிவு அரசியல் அறிவும் சொல்லாமல், அவர்களை ஜாதி மத கோட்பாடுகளுக்கு உட்படுத்துகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டார். மக்களை வழிகாட்டினார்.
ஆனால் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் நம் நாட்டை 100, 200 ஆண்டுகளுக்கு பின்னர் இழுத்துச் செல்லும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்து பேசிய இளைஞர் ஒருவரின் வெளிப்படையான பேச்சு பெரியார் நூலக அரங்கத்திற்கு அவர் வந்திருந்த போது காணொலியாக “பெரியாரின் அரசியல் முன்னோக்கியது” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைக் காண Periyar Vision OTT-அய் பாருங்கள்.
– T.வாசுதேவன், திருமங்கலம்.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
