புதுடில்லி, நவ.22 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.அய்.ஆர். (வாக் காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பருவ மழை, அறுவடை நேரம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் எஸ்.அய்.ஆர். பணி மேற் கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை எஸ்.அய்.ஆர். பணிகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கடிதம் எழுதி யுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநி லங்களில் எஸ்அய்ஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித் துள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த உத்தரவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
