புதுடில்லி, நவ. 8- தலைநகர் டில்லியின் காற்று மாசு சூழலுக்கு அதன் அருகில் உள்ள அரியானா மாநிலமே காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பஞ்சாப் மாநிலம் தலைநகரில் இருந்து 500 கி.மீ. தள்ளியிருப்பதாகவும் தெரிவித் துள்ளது. பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சியே நடைபெறுகிறது என் பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:
“பஞ்சாப்பில் விவசாயக் கழிவு கள் எரிக்கப்படுவது தேசியத் தலை நகரில் இருந்து 500 கி.மீ. தூரத்தில் நடக்கிறது. ஆனால் அரியானா மாநிலம் டில்லியில் இருந்து 100 கி.மீ. மட்டுமே தள்ளியிருக்கிறது.
அரியானாவே டில்லி காற்று மாசு அதிகரிக்கக் காரணம். இத னால், கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து அரியானாவின் மனோகர் லால் கட்டார் அரசு எடுத்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த 2022 -2023ஆம் ஆண்டில் எடுத்த பொருளாதார கணக் கெடுப்பில், கடந்த எட்டு ஆண்டு களில் டில்லியில் காற்றின் தரம் மேம்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
அதேபோல் பஞ்சாப்பில் கழிவு கள் எரிப்பது 50 – 67 சதவீதம் குறைந்திருப்பதாக காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தக வல்கள் தெரிவிக்கின்றன” இவ் வாறு அவர் தெரிவித்தார்.
தேசிய தலைநகரில் காற்றின் ஒட்டு மொத்த தரக்குறியீடு மோச மானதாகவே தொடரும் நிலையில் உயர்மட்ட கூட்டத்துக்கு டில்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே அடுத்த சில நாட்களுக்கு டில்லியில் காற்றின் தரம் மோசமானதாகவே இருக்கும் என்று இடபில்யூஎஸ் (ணிணீக்ஷீறீஹ் கீணீக்ஷீஸீவீஸீரீ ஷிஹ்stமீனீ) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காற்று மாசை எதிர்கொள்ள காற்று தர மேலாண்மை ஆணையம் 5.11.2023 டில்லியில் கிராப்-4 (நிஸிகிறி-4) கிரேடட் ரெஸ் பான்ஸ் ஆக்ஷன் ப்ளான் (Early Warning System) அய் அமல் படுத்தியது.
8 விதிகள் கொண்ட இந்தத் திட்டத்தின் படி, சமையல் எரிவாயு உருளை உள்பட மிகமிக அத் தியாவசியமான பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே டில்லிக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி மிதமான லகு ரக வாகனங்கள் தொடங்கி கன ரக வாகன்ங்கள் வரை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டு மானப் பணிகளுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.