87 விழுக்காடு மாணவர்கள் வேலைவாய்ப்பு தரும் கல்வியையே விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்

1 Min Read

புதுடில்லி, நவ.21- இங்கி லாந்தில் உள்ள ஆர்லிங்டன் ஆராய்ச்சி மய்யம், லண்டன் பல்கலைக்கழகத்தின் மூலம், இந்திய மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆய்வு மேற் கொண்டது. அதில் தெரியவந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பன்னாட்டு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் எதிர்பார்ப் பில் ஒரு சக்திவாய்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது, அது வகுப்பறை கற்றலுக்கு அப்பாற்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் இந்திய மாணவர்கள் பயன்பாட்டு கற்றல், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தொழில்முறை நடத்தைகளை தங்கள் கல்வி அனுபவத்தின் முக்கிய பகுதிகளாக கருதுகிறார்கள்.

உலக அளவில் 56 சதவீத மாணவர்கள், கல்வி குறித்து முடிவெடுக்கும்போது வேலை வாய்ப்பு என்பதை முதல் மூன்று காரணிகளில் ஒன்றாக குறிப்பிட்டனர். அதே நேரத்தில் இந்திய மாணவர்கள் சிறந்த முடிவு எடுக்கும்போது 87 சதவீதம் பேர் வேலை வாய்ப்பை முக்கியமாக கவனத் தில் கொள்வதாக குறிப்பிட்ட னர். பாடங்கள் வடிவமைப்பு, கற்றலை நேரடியாக வேலை வாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது.

கற்றலில் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்துவது அவசி யம் என்று 60 சதவீத பேர் கூறி உள்ளனர். குறிப்பாக 56 சதவீத இந்திய மாணவர்கள் தொழில் முறை நடத்தைகளை உருவாக் குவது மிக முக்கியமானது என்று குறிப்பிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *