புதுடில்லி, நவ.21- இங்கி லாந்தில் உள்ள ஆர்லிங்டன் ஆராய்ச்சி மய்யம், லண்டன் பல்கலைக்கழகத்தின் மூலம், இந்திய மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆய்வு மேற் கொண்டது. அதில் தெரியவந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பன்னாட்டு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் எதிர்பார்ப் பில் ஒரு சக்திவாய்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது, அது வகுப்பறை கற்றலுக்கு அப்பாற்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் இந்திய மாணவர்கள் பயன்பாட்டு கற்றல், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தொழில்முறை நடத்தைகளை தங்கள் கல்வி அனுபவத்தின் முக்கிய பகுதிகளாக கருதுகிறார்கள்.
உலக அளவில் 56 சதவீத மாணவர்கள், கல்வி குறித்து முடிவெடுக்கும்போது வேலை வாய்ப்பு என்பதை முதல் மூன்று காரணிகளில் ஒன்றாக குறிப்பிட்டனர். அதே நேரத்தில் இந்திய மாணவர்கள் சிறந்த முடிவு எடுக்கும்போது 87 சதவீதம் பேர் வேலை வாய்ப்பை முக்கியமாக கவனத் தில் கொள்வதாக குறிப்பிட்ட னர். பாடங்கள் வடிவமைப்பு, கற்றலை நேரடியாக வேலை வாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது.
கற்றலில் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்துவது அவசி யம் என்று 60 சதவீத பேர் கூறி உள்ளனர். குறிப்பாக 56 சதவீத இந்திய மாணவர்கள் தொழில் முறை நடத்தைகளை உருவாக் குவது மிக முக்கியமானது என்று குறிப்பிட்டனர்.
