நீதிக்கட்சி 110 ஆம் ஆண்டு தொடக்க விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
இந்த மண்ணின் மைந்தர்க ளுக்குக் கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #Non Brahmin Manifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.
நீதிக்கட்சியின் நீட்சியே நம் #Dravidian Model ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறி வோம்! – இவ்வாறு தன்னுடைய ‘எக்ஸ்’ பதிவில் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
