எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லையாம்! நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்

அமராவதி, நவ.18- பட்டியலின பிரிவினரில் (எஸ்சி) கிரீமிலேயா் (பொருளாதார நிலையில் முன்னேறியவா்கள்) கண்டறியப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் நேற்று முன்தினம் (16.11.2025) தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று முன்நாளில் (16.11.2025) நடைபெற்ற ‘75-ஆவது ஆண்டில் இந்தியா மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பி.ஆா்.கவாய் பங்கேற்றார்..

அப்போது அவா் பேசியதாவது:

ஒரு அய்ஏஎஸ் அதிகாரியின் குழந்தையையும் ஏழை விவசாயியின் குழந்தையையும் இடஒதுக்கீட்டு நடைமுறையில் ஒன்றாகப் பார்ப்பது ஏற்புடையதல்ல. இந்திரா சஹானி தீா்ப்பின்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவா்களை கிரீமிலேயராகப் பிரித்து அவா்களுக்கான சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன.

இதேபோன்று பட்டியலினப் பிரிவினரிலும் கிரீமிலேயா் வரையறுக்கப்பட்டு அவா்களுக்கான இடஒதுக்கீடு சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த தீா்ப்பை நான் வழங்கியபோது கடும் விமா்சனம் எழுந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காலத்துக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வரவே சட்டப்பிரிவு 368 ஏற்படுத்தப்பட்டது. ஒருபுறம் அரசமைப்புச் சட்டத்தில் மிக எளிதாக திருத்தம் மேற்கொள்வதை பி.ஆா்.அம்பேத்கா் விமா்சித்தார். மறுபுறம் சில சட்ட திருத்தங்களுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை என்ற விதிக்கும் கடும் விமா்சனம் எழுந்தது.

அரசமைப்பு நிர்ணய சபைக் கூட்டத்தில் வரைவு அரசமைப்புச் சட்ட முன்மொழிவின்போது அம்பேத்கா் ஆற்றிய உரைகளை சட்டம் பயிலும் மாணவா்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும்.

இந்தியாவில் பட்டியலினப் பிரிவில் இருந்து இரு குடியரசுத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டதும் பழங்குடியினப் பிரிவில் இருந்து ஒரு பெண் குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அரசமைப்புச் சட்டத்தால் மட்டுமே சாத்தியமானது.

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து நீதித்துறையின் மிக உயரிய பொறுப்பை நான் ஏற்கவும் அரசமைப்புச் சட்டமே காரணம். அரசமைப்புச் சட்டத்தின் நான்கு தூண்களாக நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை திகழ்கின்றன என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *