ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோசடிகளைத் தோலுரிக்கும் ஊடகவியலாளர்களைப் பாராட்டுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!

1 Min Read

சென்னை, நவ. 17 – “ஒன்றிய பா.ஜ.க. அர சின் ஊழல்களையும், மோசடி களையும் தோலு ரிக்கும் ஊடகவி யலாளர்களைப் பாராட்டுகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய பத்திரிகை நாளை யொட்டி விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.

தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட் டுள்ள சமூக வலை தளப் பதிவு வருமாறு:–

எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட் சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிவுடன் அவர்களது தோல்விகளையும், ஊழல்களையும், மோசடி களையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் தேசிய பத்திரிகையாளர் நாளில் பாராட்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *