சென்னை, நவ. 17 – “ஒன்றிய பா.ஜ.க. அர சின் ஊழல்களையும், மோசடி களையும் தோலு ரிக்கும் ஊடகவி யலாளர்களைப் பாராட்டுகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய பத்திரிகை நாளை யொட்டி விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.
தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட் டுள்ள சமூக வலை தளப் பதிவு வருமாறு:–
எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட் சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிவுடன் அவர்களது தோல்விகளையும், ஊழல்களையும், மோசடி களையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் தேசிய பத்திரிகையாளர் நாளில் பாராட்டுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.
