பிஜேபி ஆளும் குஜராத் மாநிலத்தில் இதுதான் சட்ட ஒழுங்கு! திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண்ணை அடித்துக் கொன்ற மணமகன்!

1 Min Read

காந்தி நகர், நவ.17 குஜராத் மாநிலம்  பாவ்நக ரைச் சேர்ந்த சாஜன் பரையா (வயது 25) மற்றும் சோனி ரத்தோட் (வயது 23) ஆகி யோர் கடந்த ஓராண்டாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

மணமக்களுக்கிடையே சண்டை

இதற்கிடையே அவர்களது திருமணம் நேற்று (16.11.2025) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்கு கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரவு 9 மணிக்கு, சாஜன், சோனிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம் திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீண்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியால் சோனியின் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளார். தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.

தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாஜன் மீது  கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை சிறப்பு குழுக்கள் அமைத்து தேடி வருவதாக ராஜேஷ் படேல் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *