புதுடில்லி, நவ.16 ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில், அரியானாவில் பறி முதல் செய்த வெடி பொருட் களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தில் தடய வியல் குழு, காவல் துறையினர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
‘‘ஜம்மு காஷ்மீரின் நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 9 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர் என்பது மிகவும் வருத்த மளிக்கிறது.
தங்கள் அன்புக்குரிய வர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர ்களுக்கு உடனடி மருத் துவ சிகிச்சை அளிக்கப் பட வேண்டும், பாதிக் கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
டில்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத் தனமான கார் குண்டுவெடிப்பு பயங்கர வாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் இது உள வுத்துறை மற்றும் பயங் கரவாத எதிர்ப்பு வழி முறைகளை வலுப்படுத்த ஒன்றிய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். ஒன்றிய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப் பிக்க முடியாது.
பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது.
அண்மையில் நடந்த செங்கோட்டை பயங்கர வாத தாக்குதலை முன்வைத்து, வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத் தலைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட் டத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
