கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி

கன்னியாகுமரி, நவ. 15– பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி குமரிமாவட்டம் முட்டம் ஆயர் ஆஞ்ஞி சுவாமி கல்வியியல் கல்லூ ரியில் நடைபெற்றது.

பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார் ஒரு ஆச்சரியக்குறி, சமூக புரட்சியாளர் பெரியார் “பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலை நோக்காளர் பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும், ஆகிய தலைப்புகளில் நடை பெற்றது.

கல்லூரி தாளாளர் .ஆல்வின் மதன் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக த் தலைவர் மா.மு.சுப்பிரமணியம்; பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர் கழக காப்பாளர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக குமரிமாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர். கல்லூரி முதல்வர் சா.ஜாஸ்மின் ஷீலா பேர்ணி போட்டியினை ஒருங்கிணைத்தார். அதிகமான மாணவ, மாணவியர்கள் இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று பெரியாருடைய வரலாறு குறித்து பேசினர். கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *