ஜார்க்கண்ட் முதலமைச்சருடன் – பீகார் முதலமைச்சர் துணை முதலமைச்சர் சந்திப்பு

1 Min Read

 ராஞ்சி மே 11 அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல மைச்சர்  நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா,  சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். 

அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர். 9.5.2023 அன்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். இந்நிலையில், நேற்று (10.5.2023) ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு நிதிஷ் குமாரும், பீகார் மாநில துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவும் சென்றனர். அங்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு இருவரும் சென்றனர். ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினர். அரசியல் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்திய தாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தித் தொடர்பாளர் வினோத்குமார் பாண்டே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *