அறிவியல் வினோதம் குழந்தையை தூங்க வைக்க நவீன எந்திரம்

1 Min Read

புதுடில்லி, நவ. 14- இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணியாற்றி வரும் நடிகர் சோமேந்திர சோலங்கி. சீன பெண்ணை மணந்த அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.

பொதுவாக குழந்தை கள் உள்ள வீடு என்றாலே பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருமே தூக்கத்தை தொலைக்க வேண்டி இருக்கும். அந்தவகையில், சோமேந்திர சோலங்கியின் குழந்தையும் இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருந்தது.

இதற்கு தீர்வாக அந்த குழந்தையின் தாத்தா சீனாவில் இருந்து ஒரு நவீன எந்திரத்தை வாங்கி சென்று அவர்க ளுக்கு பரிசளித்தார்.

அந்த எந்திரத்தில் 5 விரல்களுடன் கை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. குழந்தை தூங்கினாலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்த விரல்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறது.

இதன்மூலம் குழந்தை மட்டுமின்றி தாங்களும் நிம்மதியாக உறங்குவதாக அவர் பேசிய காணொலியை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த காணொலி சுமார் 9 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *