இதுதான் உத்தரப்பிரதேசம் ரயில் பெட்டியைக் குளியல் அறையாக மாற்றிய வாலிபர்

1 Min Read

ஜான்சி, நவ.13 ஓடும் ரயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டியில் இருக்கைகளுக்கு அருகே நடைபாதையில் ஒரு வாலிபர் குளித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் என்ற வாலிபர் ஓடும் ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குவளை மூலம் எடுத்து தனது தலையில் ஊற்றி குளிக்கிறார். மேலும் அவர் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.

இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. காணொலியை பார்த்த  பலரும் வாலிபரின் செயலை விமர் சித்து பதிவிட்டனர். இதற்கிடையே ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த வாலி பர் ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் சிறீவாஸ் என்பதும் அவர் சமூக வலை தளங்களில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு குளித்து ரீல் காட்சிப் பதிவு எடுத்து பதிவிட்டதும் ெதரிய வந்தது. இதையடுத்து அவரை ரயில்வே காவல் துறையினர் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *