சின்னம்மை பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகளில் பொது சுகாதாரத் துறை

2 Min Read

சென்னை,மே 11 – கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், சின்னம்மை போன்ற பருவ கால நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. போதிய அளவில் மருந்துகளை இருப்பில் வைக்கு மாறும், தேவைப்பட்டால் நட மாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘வேரிசல்லா’ என்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது சின்னம்மை நோய். இதன் தாக்கம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும்போது குப்பை, குவியல்களில் இருந்து வைரஸ்கள் உருவாகி காற்றில் கலந்து பரவும். அதில் ஒரு வகையான வைரஸ்தான் வேரிசல்லா. அசுத்தமான சூழ லுக்கு நடுவே வசிப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் வேரிசல்லா வைரஸ் மூலம் சின்னம்மை பரவக் கூடும். அவர்களது எச்சில் மூலம் பிறருக்கும் அது பரவலாம்.

அதை சரிவர கவனிக்காமல் விட்டாலோ அல்லது சிகிச்சை பெறாவிட்டாலோ நிமோனியா, மூளைக் காய்ச்சல், சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

சின்னம்மைக்கு தடுப்பூசிகள் உள்ளது என்றபோதிலும், அத் தகைய தடுப்பு மருந்துகள் மூலமாக அந்நோயை முழுமையாகத் தடுக்க முடியாது என்கின்றனர் மருத்து வர்கள். பலவீனமானவர்கள் தடுப் பூசி செலுத்தியிருந்தாலும், கோடை காலத்தில் சின்னம்மைக்கு ஆளாகக் கூடும் என்றும் அவர்கள் தெரிவிக் கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சின்னம்மை பாதிப்பு தமிழ்நாட்டின் சில இடங்களில் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்கக அதிகாரிகள் கூறிய தாவது:

ஆண்டுதோறும் கோடை காலத்தில் சின்னம்மை பாதிப்பு அதிகரிப்பது வழக்கமான ஒன்று தான். அதைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களில் சின்னம்மைக்கான ‘ஏசைக் ளோவிர்’ மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். ஒருவரிடமிருந்து மற்றொரு வருக்கு சின்னம்மை பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *