டில்லி, நவ. 12- சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக்முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ்,தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக் கிறார்.
தனது சகோதரர் பலாஷ உடன் இைணந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏைழக் குழந்தைகளின் இதய அறுவைசிகிச்சைக்காக நிதிதிரட்டி வழங்குகிறார். இதுவைர 3,800-க்கும் ேமற்பட்ட குழந்தை களுக்கு இதய அறுவை சிகிச்சை களுக்கான நிதி உதவிகளைச் செய்து உள்ளார். இதற்காக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் கின்னஸ் சாதைன புத்தகத்திலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
ஏழைக்குழந்தை களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அவர்கள் ரயில்பெட்டிகளைச் சுத்தம் செய்வதைப் பார்த்த போது தொடங்கியது என்று தெரி வித்துள்ள பலக், இதற்கு நிதிதிரட்டுவதற்காகேவ இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
