சட்ட உதவி என்பது கருணை அல்ல – கட்டாயம் உச்சநீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

புதுடில்லி, நவ.11 இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், குற்றம் நிரூபிக்கப்படாத விசா ரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, இந்திய சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் சுமார் 75.8 சதவீத பேர் விசாரணைக் கைதிகளே ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமை மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஜாமீன் பத்திரங்களைச் செலுத்த முடியாத காரணத்தால், இவர்கள் பல ஆண்டுகளாகக் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறையில் வாடும் அவலநிலை நீடிக்கிறது. மேலும், தங்களுக்கு உள்ள இலவச சட்ட உதவி பெறும் உரிமை குறித்து பல கைதிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததும் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இந்தச் சூழலில், சட்ட உதவி மற்றும் விசாரணைக் கைதிகள் தொடர்பான சீர்திருத்தங்களின் அவசியத்தை நீதிபதியின் கருத்து மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், ‘நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் குற்றம் நிரூபிக்கப் படாதவர்கள்; இது குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. சட்ட உதவி என்பது கருணை அடிப்படையில் வழங்கப்படும் செயல் அல்ல; அது அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாயம்.
விசாரணைக் கைதிகளில் வெறும் 7.91 சதவீத பேர் மட்டுமே சட்ட உதவியைப் பயன்படுத்தியுள்ளனர். சட்டக் கல்லூரிகள் மாணவர்களுக்கு நடைமுறை சட்ட உதவி அனுப வத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன் மூலம் இந்தத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குற்றவியல் நீதி அமைப்பில் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களை கருணையுடன் அணுக வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *