அயோத்தியில் ராமன் கோயில் கட்ட சம்மதித்திருந்தால் காங்கிரசுக்கு ஆதரவாம் ஆா்.எஸ்.எஸ். தலைவா் கூறுகிறார்

புதுடில்லி, நவ.11 அயோத்தியில் ராமன் கோயில் கட்ட சம்மதம் தெரிவித்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருப்போம் என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் 9.11.2025 அன்று தெரிவித்தார்.

காங்கிரஸ் விமர்சனம்

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சித்திருந்தார். அதேபோல் அந்த அமைப்பு பதிவு செய்யப்படாதது எனவும் அதன் நிதி ஆதாரங்கள் குறித்தும் காங்கிரஸ் தரப்பில் தொடா்ந்து விமா்சிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆா்எஸ்எஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியின்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து மோகன் பாகவத் மேலும் பேசியதாவது: ஆா்எஸ்எஸ் 1925-இல் தொடங்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் அரசிடம் அமைப்பை பதிவு செய்யக் கூறுகிறீா்களா? இந்து தா்மமும் பதிவு செய்யப்படாத ஒன்றுதான்.

சுதந்திரத்துக்குப் பிறகு அமைப்பை பதிவு செய்வது கட்டாயம் என இந்திய அரசு கூறவில்லை. வருமான வரித் துறை மற்றும் நீதிமன்றங்கள் ஆா்எஸ்எஸ் அமைப்பை தனிநபா்களின் சங்கம் என்றே கூறுகின்றன. அதனால் ஆா்எஸ்எஸுக்கு வருமான வரி செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு ஆதரவாம்

நாங்கள் கொள்கைகளைத்தான் ஆதரிக்கிறோம். எந்தவொரு கட்சியையும் தனிபட்ட நபரையும் ஆதரிப்பதில்லை. அயோத்தியில் ராமா் கோயில் கட்ட சம்மதித் திருந்தால் காங்கிரசுக்கு ஆதரவளித் திருப்போம். ராமா் கோயிலைக் கட்டுவதாக பாஜக உறுதியளித்தது. எனவேதான் அந்தக் கட்சிக்கு ஆதரவளித்தோம்.

காவிக் கொடியை ஆா்எஸ்எஸ் குருவாக கருதுகிறோம். அதேசமயம் இந்திய மூவா்ணக் கொடியையும் மதிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *