இப்படியும் ஒரு பக்தை! எரியும் கற்பூரத்தை உண்டியலில் போட்ட பெண்! ரூபாய் நோட்டுகள் கருகி நாசம்!

1 Min Read

நகரி, நவ.10- ஆந்திராவில் பெண் பக்தர் ஒருவர் எரியும் கற்பூரத்தை உண்டியலில் போட்டதால் ரூபாய் நோட்டுகள் கருகி நாசமானது.

உண்டியலில் இருந்து புகை

ஆந்திர மாநிலம் காக்கி நாடா மாவட்டம் பிடாபுரத்தில் உள்ளது வல்லப மகாசுவாமிகள் கோவில். இங்கு நேற்று (9.11.2025) சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு பெண் பக்தை செய்த செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் ஊழியர்கள் நேற்று (9.11.2025) வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென, கோவில் உண்டியலில் இருந்து புகை வருவதைக் கவனித்தனர். உடனே உஷாரான அவர்கள் உண்டியலுக்குள் தண்ணீரை ஊற்றினர். இதனால் நெருப்பு அணைந்து, உண்டியலில் இருந்த நோட்டுகள் நனைந்து போனது.

பின்னர் உண்டியலைத் திறந்து பார்த்தபோது, ஏராளமான ரூபாய் நோட்டுகள் முழுவதும் எரிந்து போயி ருந்தன. பல நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டன. சில நோட்டு கள் உண்டியலில் ஊற்றிய தண்ணீரில் நனைந்திருந்தன.

உலர்த்தப்பட்ட ரூபாய் நோட்டுகள்

அதன் பின்னர் நனைந்த ரூபாய் நோட்டுகளை ஒரு துணியில் போட்டுக் காய வைத்தனர். தலைமுடியை உலர்த்தும் ‘ஹேர் டிரையர்’ கருவி மூலம் சூடான காற்றை ரூபாய் நோட்டுகள் மீது விழச்செய்து அவற்றை உலர்த்தினர். பின்னர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பக்தை கற்புரம் ஏற்றி, உண்டியலில் போடும் காட்சி பதிவாகி இருந்தது. அந்தப் பெண் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த பெண்ணிடம் இருந்து எரிந்து போன உண்டியல் பணத்தை பறிமுதல் செய்ய உள்ளதாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *