குரூப் 4 நியமனத்துக்கு சான்றிதழ்களைப் பதிவேற்ற விளையாட்டு வீரர்களுக்கு நவம்பர் 14 வரை வாய்ப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ. 10- குரூப்-4 தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும் 690 விளையாட்டு வீரர்கள் இன்னும் சான்றிதழ்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்களின் அரசு பணி வாய்ப்பு பறிபோகக்கூடி சூழலில் அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கடைசியாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரியவர்களில் 1280 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கால அவகாசம்

அவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்ததற்காக சான்றிதழ்களை உரிய படிவத்தில் பெற்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நவம்பர் 5 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 590 பேர் மட்டுமே சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு போட்டி படிவங்களை பதிவேற்றம் செய்திருப்பதும் எஞ்சிய 690 பேர் எவ்வித ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யாததும் தற்போது தெரிய வருகிறது.

ஆவணங்களை…

அதோடு விளையாட்டு போட்டி தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தவர்களும் தங்கள் சான்றிதழ்களை மட்டுமே பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.உரிய படிவத்தில் பெறப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவில்லை. இவை மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் சங்கத்திடமிருந்த பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை பதிவேற்றம் செய்வதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒதுக்கீடு கோரி

சான்றிதழ் ஆவணங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தேவையான கையெழுத்து பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சான்றிதழ்களும், படிவங்களும் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் ஒதுக்கீடு கோரி தேர்ச்சி மதிப்பெண் எடுத்துள்ள விண்ணப்பதாரர்கள் உரிய வகையில் பெறப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அவர்கள் நவம்பர் 14ஆம் தேதிக்குள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் பரிசீலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *