பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு. சந்தி சிரிக்கிறது ஏடிஎம் எந்திரத்தை கயிறு கட்டி இழுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

1 Min Read

ஜெய்ப்பூர், நவ. 10- ராஜஸ்தானில், கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கயிறு கட்டி இழுத்து பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

காணாமல் போன ஏ.டி.எம்.

பணம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களின் கைகளில் அதிக அளவில் பணம் புழங்குவது குறைந்து வருகிறது. தேவையான பயணத்தை சிறுகச்சிறுக ஏ.டி.எம். மய்யங்களில் சென்று எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் திருடர்கள், மக்களிடம் இருந்து திருடுவதைவிட ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து மொத்தமாக திருடும் நுட்பங்களை ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் புதுப்புது வழிகளில் ஏ.டி.எம். திருட்டுகள் அரங்கேறி வருகின்றன.

இதில் கொஞ்சம் பழைய ‘டெக் னிக்’காக இருந்தாலும், ஏ.டி.எம். எந்திரத்தை கூண்டோடு பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்துள்ளது. அங்கு ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ளது நெஹ்தாய் கிராமம். இங்கு ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மய்யம் இயங்கி வருகிறது. நேற்று (9.11.2025) காலையில் கிராமவாசிகள் ஏ.டி.எம். மய்யத்துக்கு சென்ற போது எந்திரம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கயிறுகட்டி இழுத்து பெயர்த்தனர்

காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் விரைந்து வந்து கண்காணிப்பு ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

அப்போது 8.11.2025 ன்று  இரவில் ஒரு வாகனத்தில் திருடர்கள் வந்து இறங்குவதும், அவர்கள் கயிற்றால் கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை இழுப்பதும், பின்னர் எந்திரத்தை அங்கிருந்து தூக்கிச் சென்றதும் தெரியவந்தது.

ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து வங்கி நிர்வாகம் உடனடியாக தகவல் வெளியிடவில்லை. எத்தனை பேர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர் என்று தெரிய வில்லை. இருந்த போதிலும் திருடர்களை விரைந்து பிடிக்கும் வகையில், காவல் துறை யினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *