திரிணமுல் எம்.பி.யின் செயலற்ற வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 56 லட்சம் கொள்ளை!

1 Min Read

கொல்கத்தா, நவ. 9– மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பின ருமான கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கிலிருந்து போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் ரூ. 56 லட்சம் பணத்தை சைபர் குற்றவாளிகள் கொள்ளை யடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாகப் பயன் படுத்தப்படாமல் இருந்த சேமிப்புக் கணக்கு குறிவைத்து இந்தச் சைபர் மோசடி அரங்கேறியுள்ளது,
இது மேற்கு வங்க அரசியல் மற்றும் வங்கி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி 2001 முதல் 2006 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துவங்கப்பட்ட அவரது சேமிப்புக் கணக்கு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் செயலற்ற நிலையில் இருந்துள்ளது. இதை சைபர் குற்றவாளிகள் இலக்கு வைத்துள்ளனர். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, போலி பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி, அந்தக் கணக்கில் இணைக்கப்பட்டிருந்த கைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களையும் சைபர் குற்றவாளிகள் புதுப்பித் துள்ளனர்.

விவரங்களைப் புதுப்பித்த சில நாட்களுக்குள், இணைய வங்கி பரிவர்த்தனைகள் மூலம் கணக்கில் இருந்த மொத்தத் தொகையான ரூ. 56.39 லட்சத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். மேலும், நகை வாங்குதல் மற்றும் ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு பணத்தை முழுவதுமாகத் திருடியுள்ளனர்.
இந்த மோசடி குறித்து எஸ்.பி.அய். வங்கி நிர்வாகம் கொல்கத்தா காவல் துறையில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *