வங்கிகள் தனியார்மயம் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அதிருப்தி

1 Min Read

புதுடில்லி, நவ.8 பொதுத் துறை வங்கிகளைத் தனி யார்மயமாக்குவது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் பேசியதை விமர்சித்துள்ள வங்கி சங் கங்களின் கூட்டமைப்பு, ‘கூடுதல் மூலதனம் ஒதுக் கீடு செய்து பொதுத் துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள் ளது.
அண்மையில் டில்லியில் நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘கடந்த 1969-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கல், அனை வருக்குமான நிதிச் சேவை என்பதில் விரும்பிய பலனைத் தரவில்லை. வங்கிகள் தனியார்மயமாக்கம் தேச நலனைப் பாதிக்காது’ என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக வங்கி சங்கங் களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 90 சதவீதத்தை பொதுத் துறை வங்கிகள்தான் கையாண்டு வரு கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு கடனளிப்பது, சமூக நலன் சார்ந்த வங்கிச் சேவையை வழங்குவதில் பொதுத் துறை வங்கிகள்தான் முன்னிலை வகிக்கின்றன. கிராமப்புறங்களில் அதிக கிளைகளைத் திறந்து சேவை களை வழங்குவதும், நிதிசார்ந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் பொதுத் துறை வங்கிகள்தான்.
இந்திய வங்கித் துறை இன்று வலுவாக செயல்படுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பொதுத்துறை வங்கிகளும், அதன் மீதான மக்களின் நம்பிக்கையும்தான், உலகில் எந்த நாடும் தனியார் வங்கிகளைப் பயன்படுத்தி சாதித்தது இல்லை. அனைவருக்குமான நிதிச் சேவை என்பதை தனியார்மயம் மூலம் சாதித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *