காவல் நிலையங்களில் இனி பஜனை பாடல்கள் தானா? மத்தியப் பிரதேச பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு

1 Min Read

போபால், நவ.8  ம.பி.யில் காவல் பயிற்சி காவலர்களுக்கு, ராம் சரிதமானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடுதல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்தரவிட்டுள்ளார்.

ம.பி.யில் காவல்துறை காவலர் பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட சுமார் 4,000 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ம.பி.யின் 8 பயிற்சிக் கல்லூரிகளில் 9 மாதங்களுக்கான இந்தப் பயிற்சியை கூடுதல் டிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலையில் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், ‘‘கடவுள் ராமரின் நற்பண்புகள் மற்றும் அவரது 14 ஆண்டு கால வனவாசத்தை விவ ரிக்கும் ராம்சரிதமானஸை பயிற்சி காவலர்கள் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். இது ஒழுக்க உணர்வை ஏற்படுத்தும்’’ என்றார்.

பகவத் கீதை வகுப்பு

இந்நிலையில் பயிற்சி காவலர் களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த தற்போது அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ம.பி.யின் 8 காவலர் பயிற்சி கல்லூரிகளின் கண்காணிப்பாளர்களுக்கு அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அனைத்து பயிற்சி மய்யங்களிலும் பகவத் கீதை பாராயண அமர்வு நடத்த வேண்டும். பகவான் கிருஷ்ணரின் தற்போதைய புனித மாதத்தில் (அகஹன் கிருஷ்ணா) முடிந்தால் பகவத் கீதையின் ஓர் அத்தியாயமாவது படிக்க வேண்டும். தினசரி தியானப் பயிற்சிக்கு முன் இந்த அமர்வை நடத்தலாம்.

பகவத் கீதை நமது நித்திய வேதம். இதை தொடர்ந்து படிப்பது, நம் பயிற்சியாளர்கள் நேர்மையான வாழ்க்கை வாழ நிச்சயம் வழி காட்டும். மேலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

கூடுதல் டிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங், 1994-ம் ஆண்டு பேட்ச் அய்பிஎஸ் அதிகாரி ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் குவாலியர் சரக காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அவர் இதேபோன்ற பிரச்சாரத்தை தொடங்கி, உள்ளூர் சிறைக் கைதிகள் மற்றும் பிறருக்கு பகவத் கீதை பிரதிகளை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *