பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கிய மேயர்

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை,மே13 – சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த என்.காயத்ரி, எஸ்.தவசியம்மாள், ஏ.மோனிஷா, பி.விஷ்ணு வரதன், எஸ்.விசாலி, டி.அஸ்வினி, எம்.நஸ்ரின் பேகம், எஸ்.ஸ்ரேயா, ஜி.துர்கா மற்றும் எஸ்.ரிஸ்வானா அன்ஜூம் ஆகியோர் நேற்று (12.5.2023) ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, சிறப்பிடம் பெற்ற 10 மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நவீன கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கி மேயர் பாராட்டினார். தொடர்ந்து உயர்க்கல்வி படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி, சிறப்பிடம் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கல்வி துணை ஆணையர் சரண்யா அரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *