புதுடில்லி, நவ.7 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45-ஆவது கூட்டம் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் தொடங்கியது. தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருநாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழ்நாட்டிற்கு 2025, நவம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 13.78 டி.எம்.சி. நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கருநாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார். இதனை பரிசீலித்த ஆணையம், கருநாடகா அரசு 13.78 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என தெளிவான உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு பிலிகுண்டுலு பகுதியில் நீர் வெளியீட்டைக் கண்காணிக்க சிறப்பு பொறியாளர் குழுவை நியமித்துள்ளது.
