சிங்கப்பூரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

1 Min Read

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வரும் 9.11.2025 அன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் அரங்கத்தில் “பெரியாரும்- சிங்கப்பூரும்” என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் ‘‘பெரியார் விழா 2025” நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (6.11.2025) சிங்கை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில், தமிழர் தலைவருக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் மதியுரைஞர் வி.கலைச்செல்வன், தலைவர் க.பூபாலன், செயலாளர் தமிழ்ச் செல்வி ராஜராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். சிங்கப்பூர் தமிழவேள் மன்றத்தின் செயலாளரும், ‘செம்மொழி’ இதழின் ஆசிரியருமான இலியாஸும், அவரது வாழ்விணையரும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மன்றத்தின் உட்கணக்காய்வாளர் நா.மாறன், செயற்குழு உறுப்பினர்கள் வீ.கவிதா, ச.ராஜராஜன், மன்ற உறுப்பினர் அதியமான், பெரியார் பிஞ்சு அகரன் ஆகியோர் விமான நிலையத்துக்கு வந்திருந்து, தமிழர் தலைவரை வரவேற்றனர். உடன் தமிழர் தலைவர் அவர்களின் வாழ்விணையர் மோகனா வீரமணி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *