போலி ஒளிப்படங்கள் கொண்ட வாக்குகளை நீக்குவதற்கு மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் ஏன் பயன்படுத்துவதில்லை? ராகுல் காந்தியின் அழுத்தமான கேள்வி!

3 Min Read

புதுடில்லி, நவ.6 இரண்டுக்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அதை ஏன் பயன்படுத்தவில்லை என பல ஆயிரம் பக்க ஆவணங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

1.24 லட்சம் வாக்காளர்களுக்கு போலி ஒளிப்படங்கள்

அரியானாவில் பெண் ஒளிப்படத்துடன் கூடிய ஆண் வாக்காளர் வாக்குப் பதிவு செய்தது அம்பலமாகி உள்ளது. ஒரே ஒளிப்படத்துடன் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதில் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரே ஒளிப்படத்துடன் 2 வாக்குச்சாவடியில் மட்டும் 223 வாக்காளர்கள் வாக்கு செலுத்தி யுள்ளனர். முறைகேட்டை மறைக்கவே வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவியை அழித்துள்ளனர். அரியானாவில் 1.24 லட்சம் வாக்காளர்களுக்கு போலி ஒளிப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அரியானாவில் வாக்குப் பதிவு!

இரண்டுக்கு மேல் பதிவான வாக்கு களை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதை ஏன் பயன்படுத்தவில்லை. தேவையான மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கவில்லை. ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு உ.பி.யிலும் அரியானாவிலும் வாக்கு உள்ளது. உத்தரப்பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் இருக்கும் தால்சந்துக்கு அரியானாவில் வாக்கு உள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான பலருக்கு அரியானாவிலும் வாக்கு உள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாக்கா ளர்கள் அரியானாவிலும் சென்று வாக்க ளித்துள்ளனர்.

தலைமைத் தேர்தல்
ஆணையரே ஒப்புதல்!

உத்தரப் பிரதேசம் மதுரா மாவட்டத்திலும், அரியானாவில் ஹோடல் தொகுதியிலும் ஒரே பாஜக நிர்வாகிக்கு வாக்கு உள்ளது. 93,000 வாக்காளர்களுக்கு வீட்டு முகவரியே இல்லை என்பதை தலைமைத் தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாண்டு ஆக.17 ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறும் ஒவ்வொரு வார்த்தை யையும் சோதனைக்கு உட்படுத்துவோம். கதவு எண் பூஜ்ஜியம் என்று இருந்த ஒவ்வொரு வாக்காளரையும் சோதனை செய்தோம். பங்களாவில் வசிக்கும் நரேந்திர குமார் என்பவருக்கு வீட்டு எண் ‘0′ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக வரியை தேடிச் சென்றால் அங்கு யாரும் இல்லை.

தேர்தல் ஆணைய உதவியுடன்…

அரியானாவில் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு சிறிய வீட்டில் 108 வாக்காளர்கள் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சட்டப்படி 10–க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஒரே முகவரியில் இருந்தால் நேரடி சோதனை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே வாக்காளர்களின் முகவரிகளை சரிப்பார்க்கவில்லை. அரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஒரு தொகுதியில் மட்டும் 3.5 லட்சம் வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள்தான் பாஜக முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறிய உக்தி. ஆட்சி திருட்டு நாட்டின் ஜனநாயகத்தை அழித்தது. எஸ்.அய்.ஆர். என்ற புதிய ஆயுதம் மூலம் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள். அரியானாவைத் தொடந்து பீகாரில் ஆட்சி திருட்டுக்கான பணியை தேர்தல் ஆணைய உதவியுடன் பா.ஜ.க. தொடங்கிவிட்டது. இந்திய இளைஞர்களுக்கு ஜனநாயகத்தை காப்பாற்றும் வலிமை உள்ளது என ராகுல் தெரிவித்தார்.

இந்தியா

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியின் படத்தை வாக்காளர் பட்டியலில் அச்சிட்டு, அரியானாவின் ஒரு தொகுதியில் 22 வாக்குகள் செலுத்தப்பட்டு இருந்தது என்று கூறிய  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கான  ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது போலி வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் போது இணையத்தில் கிடைத்த படங்களை எல்லாம் பதிவேற்றுவார்கள்.  அப்படி பதிவேற்றும் போது, இந்திய முகச்சாடையுடன் பிரேசில் மாடல் அழகி படம் இருந்ததால் அவரது படத்தையும் சேர்த்து விட்டனர்.

பிரேசில் மாடல் அழகி லாரிசா

இதனிடையே, இந்தியாவில் தன்னுடைய ஒளிப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்களா? என பிரேசில் மாடல் அழகி லாரிசா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘என்னை இந்தியனாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?’’ என கேள்வி எழுப்பி
யுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *