சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரயில் பாதை மிகவும் பரபரப்பான ரயில் பாதை. இந்நிலையில், இந்த ரயில் பாதையில் நேற்று (4.11.2025) பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.
இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
