வடகிழக்கு மாநில மக்கள் நலனுக்காக விரைவில் புதிய அரசியல் இயக்கம் மேகாலயா முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு

2 Min Read

சில்லாங், நவ.5 வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் நலனுக்காகவும், அவர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்கவும் விரைவில் தனித்து வமான ஒரு புதிய அரசியல் இயக் கத்தை உருவாக்க உள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, திரிபுராவின் திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் மாணிக்யா, மற்றும் நாகாலாந்து மாநில பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் எம். கிகோன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

புதிய அரசியல் இயக்கம்

மேகாலயாவின் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் (NPP) தலைவருமான முதலமைச்சர் கான்ராட் சங்மா, பிரத்யோத் மாணிக்யா, மற்றும் எம்.கிகோன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கான்ராட் சங்மா, “வடகிழக்குக்கான ஒரு தனித்துவமான புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நாங்கள் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழு தனது அறிக்கையை 45 நாட்களுக்குள் அளிக்கும்,” என்று தெரிவித்தார்.

“எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் போராட நாங்கள் இங்கு வரவில்லை. எங்கள் முதன்மை கவனம் வடகிழக்கு மக்கள் மீதுதான். வடகிழக்கு மக்க ளுக்கு ஒரே அரசியல் தளத்தை வழங் குவதே இதன் நோக்கம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தக் குழு மற்ற அரசியல் கட்சிகளை அணுகி ஆதரவு திரட்டும் பணியை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார். பழங்குடி மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான குறிக்கோள். எங்கள் கட்சிகள் ஒன்றிணைந்து சரியான நேரத்தில் ஒரு அரசியல் அமைப்பாக மாறும்.

திரிபுரா மாநிலத்தின் இரண் டாவது பெரிய கட்சியான திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்யா பேசுகையில், “நாங்கள் எங்கள் மக்களுக்காக உறுதியுடனும் உண்மையுடனும் பேச விரும்புகிறோம். எங்களுக்குள் வெவ்வேறு கண் ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், நாங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட விரும்பவில்லை. நாங்கள் யாருடனும் சண்டையிட வரவில்லை. அதேநேரத்தில் எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடு கிறோம்,” என்று தெரிவித்தார்.

வடகிழக்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்க மூன்று மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல் ஆளுமைகள் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அந்த மண்டலப் பகுதி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *