இதற்குப் பெயர்தான் பாசிசம்! எதிர்க்கட்சி ஆதரவாளர்களைத் தேர்தல் நாளில் வீட்டுக்குள் வைத்து பூட்டுங்கள்! ஒன்றிய அமைச்சரின் அடாவடி பேச்சு

1 Min Read

பாட்னா, நவ.5 அய்க்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன், ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

பீகாரில் அவரது நாடாளுமன்றத் தொகுதியான முங்கருக்கு உட்பட்ட மொகாமா சட்டமன்றத் தொகுதி அய்க்கிய ஜனதாதள வேட்பாளர் ஆனந்த் சிங், அண்மையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’

இந்நிலையில், மொகாமா தொகுதியில் பிரசாரத் தின்போது ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியதாக ஒரு காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகி யுள்ளது.

அதில் அவர்  கூறியிருப்பதாவது:-

இந்தத் தொகுதியில் சிலர் இருக்கி றார்கள். தேர்தல் நாளில் அவர்களை நீங்கள் வெளியே வரவிடக்கூடாது. அவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்கள்.

ஒருவேளை அவர்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால், அவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் வாக்களித்ததை உறுதி செய்த பிறகு அவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒன்றிய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *