பிரதமர் மோடியை தேர்தல் நேரத்தில்தான் பார்க்க முடியும் காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்

பாட்னா, நவ.4- வைஷாலி மாவட்டம் ராஜா பாகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கி ரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே பேசியதாவது:-

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மனுஸ்மிரிதியில் நம்பிக்கை கொண்ட பா.ஜனதாவின் மடியில் அமர்ந்து இருக்கிறார். சோசலிஸ்டு தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்மனோகர் லோகியா, கர்பூரி தாக்கூர் ஆகியோருக்கு அவர் துரோகம் இழைத்து விட்டார். பட்டியல் இனத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் தலைவராக முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு, தன்னை பா.ஜனதா முதல மைச்சர் ஆக்காது என்பது நிதிஷ்குமாருக்கு தெரியாது.

பிரதமர் மோடிக்கு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்ல நேரம் இருக்கிறது. ஆனால் தனது நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நேரம் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது. நகராட்சி தேர்தலில் கூட அவர் தெருக்களில் சுற்றி வருவதை பார்க்க முடியும். பீகார் சட்டசபை தேர்தலில் கூட அவர் ஏதோ தனது மகன் திருமணத்தைப்போல் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியா

துப்பாக்கி முனையில் பதவி பெற்றதாக கூறுவதா?

பிரதமர் மோடிக்கு தேஜஸ்வி கண்டனம்

பாட்னா, நவ.4 காங்கிரசின் தலையில் நாட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டி, பீகார் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை ராஷ்டிரீய ஜனதாதளம் பெற்றதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி பாட்னா வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் பேச்சு பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:-

பிரதமர் கருத்து பற்றி நான் சொல்ல எதுவும் இல்லை. எந்தப் பிரதமரும் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதாக நான் கேள்விப்பட்டது இல்லை. இது அவரது சிந்தனைத் திறனை காட்டுகிறது. பிரதமர் மோடி குஜராத்துக்கு போகும்போதெல்லாம் தகவல் தொழில் நுட்ப தொழிற்சாலைகள், செமிகண்டக்டர் ஆலைகள், டேட்டா சென்டர்கள் ஆகியவை பற்றி பேசுகிறார். ஆனால் பீகாருக்கு வரும் போது, ‘கட்டா’ (நாட்டு துப்பாக்கி) பற்றி பேசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *