பீகார் தேர்தல் முடிவு மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் அடித்தளத்தை உலுக்கும் : அகிலேஷ்

பூரினியா, நவ.2 இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலை வர் அகிலேஷ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அகிலேஷ் பேசியதாவது:-

பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். ஒன்றிய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்து பவர்கள் அல்ல. ஒட்டு மொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.
இவ்வாறு அகிலேஷ் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத் தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *