வடகிழக்குப் பருவமழை குடிநீர் தரப் பரிசோதனை அதிகரிப்பு சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

சென்னை, நவ.2 வடகிழக்குப் பருவமழையையொட்டி, குடிநீருடன் கழிவுநீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய, கூடுதல் இடங்களில் குடிநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக, மழைநீா் வடிகால்கள் மற்றும் கழிவு நீா்க் கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீா் பெருக்கெடுத்தது. இந்த நிலையில், குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் குடிநீர்க் குழாய்கள் அமைக்க குழி தோண்டும்போது, அவ்வழியாக கழிவுநீா் நேரடியாக குடிநீருடன் கலக்கும் அபாயம் உருவாகும். இதைத் தடுக்கும் வகையில், செப்டம்பா் மாத இறுதியுடன் புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆகையால், மழையின்  போது குடிநீருடன் கழிவுநீா் கலக்கும் வாய்ப் புகள் மிகக் குறைவு.

வழக்கமாக மாநகராட்சி முழுவதும் நாள்தோறும் 300 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படும். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள்தோறும் 600 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுத்து தரப்பரிசோதனை செய்யப்படுகிறது.

அத்துடன், குடிநீருடன் கழிவுநீா் கலப்பு இருக்கும்பட்சத்தில் அவற்றை உடனடியாக சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *