ஜப்பான் – அமெரிக்கா இடையே அரியவகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து

2 Min Read

டோக்கியோ, அக். 29- ஜப்பானில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் முதல் பெண் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 24.10.2025 அன்று இரவு ஆசிய நாடுகளுக்கு பய ணம் மேற்கொண்டார். முதற்கட்டமாக மலே சியா தலைநகர் கோலா லம்பூரில் நடந்த ஆசி யான் மாநாட்டில் கலந்து கொண்டு தலைவர்களிடைய உரையாற்றினார்.

அப்போது கம்போ டியா-தாய்லாந்து இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டிற்கு சென்றடைந்தார். அங்கு மன்னர் நருஹிட்டோவை இம்பீரியல் அரண்மனை யில் சந்தித்து டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனை தொடர்ந்து டோக்கியோவில் உள்ள அகசாகா அரண்மனை யில் அவர் தங்க வைக்கப் பட்டார். இந்தநிலையில் நேற்று (28.10.2025) அந்த நாட்டின் முதல் பெண் பிரதமரான சனே தகைச் சியை டிரம்ப் சந்தித்தார்.பிரதமராக பதவியேற்ற ஒருவாரத்தில் நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையேயான இந்த சந்திப்பு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க, பொருளாதார முக்கியத் துவம் வாய்ந்த தருணமாக அந்த நாட்டு மக்கள் மற்றும் ஊடகங்களால் பார்க்கப்பட்டது.

ராணுவ ஒப்பந்தம்

இந்த சந்திப்பின்போது இருவரும் சில நிமி டங்களுக்கு கை குலுக்கி கொண்டனர். அப் போது டிரம்ப் சனே தகைச்சியிடம் “இது மிகவும் வலுவான கைகுலுக்கல்” என பாராட்டினார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் சுமார் 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்கா மீதான ஜப்பானின் ரூ.46.2 லட்சம் கோடி (550 பில்லியன் டாலர்கள்) முதலீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் இருநாட்டு உறவுகள், ராணுவ ஒப்பந்தங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் அரியவகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். அரியவகை கனிமங்கள் ஏற்றுமதியில் சீனாவின் ஏகபோகத்தை முறியடிக் கும் விதமாக இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு இருநாடுகளால் மேற்கொள் ளப்பட்டுள்ளது.பின்னர் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சனே தகைச்சி, “புதிய பொற்காலத்தை உருவாக் கும் வகையில் டிரம்புடன் இணைந்து, ஜப்பான்-அமெரிக்க கூட்டணியை உருவாக்குவேன். உலகின் மிகச்சிறந்த வலிமையான கூட்டணியாக இது உருவாகியுள்ளது” என்றார்.

“ஜப்பானுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன்’ என டிரம்ப் பேசினார். பின்னர் இருநாட்டு தலை வர்களும் ஜப்பானில் உள்ள யோகோசுகா கடற்படை தளத்திற்கு சென்று இருநாட்டு ராணுவ வீரர்களிடையே உரையாடினர்.இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியாவுக்கு சென்றார். அங்கு நடை பெற வுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *