பீகார் : ‘இண்டியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

பாட்னா, அக்.29 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான, ‘மகாகட்பந்தன்’ கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நேற்று (28.10.2025) வெளியிட்டார்.

முக்கிய அம்சங்கள்

* ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

* அரசுத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர்

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்

* வக்ஃப் திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்

* ‘கள்ளு’க்கடைகள் திறக்கப்படும்

* மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்

* சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி; பாசனத்திற்கு இலவச மின்சாரம்

* பட்டப்படிப்பு வரை இலவச கல்வி; அனைத்துக் கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச லேப் – டாப்

* குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு

* அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு; சுயஉதவி குழுக்களுக்கு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *