பா.ஜ.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் வெறுப்புப் பேச்சு! ‘‘முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் இந்துக்களுக்கு வேலையாம்!’

1 Min Read

லக்னோ, அக்.29 வாக்குத் திருட்டு தொடர்பான தகவல் வெளியான பின்பு பாஜகவினர் தொடர்ந்து வெறுப்புப் பேச்சைக் கக்கி வருகின்றனர். இதில் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு வன்முறை யைத் தூண்டும் வகையில் மிக மோசமாக உள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத்தின் டோமரியா கஞ்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பா.ஜ.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராகவேந்திர பிரதாப் சிங் பேசுகையில்,

“முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்” என்று கட்டாய மதமாற்றத்தைத்  தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் முஸ்லிம் பெண்களைக் கடத்து மாறு தவறான வழிகாட்டுதல்களையும் அவர் கூறியுள்ளார். பிரதாப் சிங்கின் பேச்சுக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *