பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் மருத்துவர் தற்கொலை: மகாராட்டிர அரசு நிர்வாகத்தின் படுகொலை ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடில்லி, அக்.28 ம​கா​ராட்டிர பெண் மருத்​து​வர், அந்த மாநில அரசு நிர்​வாகத்​தால் படு​கொலை செய்​யப்​பட்​டிருக்​கிறார் என்று காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்டியுள்​ளார்.

மருத்துவர் தற்கொலை

மகா​ராட்டி​ரா​வின் சதாரா மாவட்​டம், பால்​டன் பகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றிய பெண் மருத்​து​வர் (28) கடந்த 7 ஆம் தேதி தற்​கொலை செய்து கொண்​டார். தனது மரணத்​துக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால் பாதானே காரணம், அவர் 4 முறை பாலியல் வன்​கொடுமை செய்​தார் என்று பெண் மருத்​து​வர் தனது உள்​ளங்​கை​யில் குறிப்பு எழு​தி​யிருந்​தார்.

அதோடு 4 பக்க கடிதத்​தை​யும் பெண் மருத்​து​வர் எழு​தி​யுள்​ளார். அதில், ‘‘ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், 2 உதவி​யாளர்​கள் சில நபர்​களுக்கு போலி​யான உடற்​தகுதிச் சான்​றிதழ்​கள் வழங்க வற்​புறுத்​தினர்’’ என்று குற்​றம் சாட்​டி​யிருந்​தார்.

இந்த சூழலில் காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மகா​ராஷ்டிர பெண் மருத்​து​வர் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளார். அவர் மிகக் கடுமை​யாக மிரட்​டப்​பட்டு உள்​ளார். அவரது தற்​கொலை பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி இருக்​கிறது. ஊழல் அரசு அதி​காரி​கள், குற்றவாளிகளின் சதி​யில் சிக்கி அவர் உயிர் இழந்​துள்​ளார்.

குற்றவாளி​களிடம் இருந்து பொது​மக்​களைக் காப்​பது அரசின் கடமை. ஆனால் மகா​ராட்டிர அரசு நிர்​வாகமே அப்​பாவி பெண்​ணின் உயிரைப் பறித்​திருக்​கிறது. பாஜகவைச் சேர்ந்த சிலர், பெண் மருத்​து​வரை மிரட்டி உள்​ளனர். போலி உடற்​தகுதி சான்​றிதழ்​களை வழங்​கக் கோரி நிர்​பந்​தம் அளித்​துள்​ளனர். மகா​ராட்டிர பெண் மருத்​து​வரை, அந்த மாநில அரசு நிர்​வாகமே படு​கொலை செய்​திருக்​கிறது. அரசு நிர்​வாகம் குற்றவாளி​களுக்கு அடைக்​கலம் கொடுத்​தால், மக்​களுக்கு எவ்​வாறு நீதி கிடைக்​கும். பெண் மருத்​து​வரின் மரணம், மகா​ராட்டிர பாஜக அரசின் நிர்​வாகச் சீர்​கேட்டைப் பிர​திபலிக்​கிறது. பாதிக்​கப்​பட்ட பெண் மருத்​து​வரின் குடும்​பத்​துக்கு நீதி கிடைக்கக் காங்​கிரஸ் உறு​துணை​யாக இருக்​கும்​.

இவ்​வாறு ராகுல்​ காந்​தி தெரி​வித்​துள்​ளார்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *