முஸ்லிம் பெயர்களில் உள்ள ஊர்களின் பெயர் மாற்றம் காரணம் கற்பிக்கிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர்

லக்னோ, அக் 28 உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று (27.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் ‘அயோத்தி’ என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம் ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்பட்டது. தற்போது முஸ்தபாபாத் நகரத்தை ‘கபீர் தாம்’ என பெயர் மாற்றம் செய்யப் போகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசுகள், நமது நாட்டில் உள்ள மிகவும் அழ கான, மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை மீட்டெடுத்து வருகின் றன. அதில் ஒரு பகுதிதான் இது.

நமது ஒற்றுமையைக் குலைக்க, சில சக்திகள் உருவாகி வருகின்றன. அதுபோன்றவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஜாதி என்ற பெயரால் நம்மிடையே பிரிவினையை உருவாக்க முயலும் சக்திகளிடம் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

அனைத்துப் பிரச்சினைகளுக் கும் தேசப்பற்றுதான் தீர்வாக இருக்க முடியும். இந்த இடம் சாதாரண பூமியல்ல. இது நமது தாய்நாடு, தந்தை நாடு. நாட்டுக்காக சேவை செய்வது உண்மையாகவே கடவுளுக்கு செய்யும் தொண்டாகும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *