இணையவழி மோசடிகளை விளக்கி குறும்படம்: காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கை

சென்னை, அக்.28- சமீப கால​மாக இணைய​வழிமோசடிகள் அதி​கள​வில் நடை​பெறுகின்​றன. குறிப்​பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்​டிப்பு லாபம் தருவ​தாகக் கூறி பணம் பறிக்​கப்​படு​கிறது.

இவ்வாறு பாதிக்கப்படும் பொது மக்​கள் எண்:
1930-க்கு தொடர்​பு​கொண்டு விவரங்​களை தெரிவிக்​கலாம் அல்​லது https.www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தில் புகாரை பதிவு செய்​ய​லாம் என சென்னை காவல் ஆணை​யர் அருண் அறி​வுறுத்தி உள்​ளார்.

மேலும், பங்​குச் சந்தை முதலீட்டு மோசடிகளில் யாரும் சிக்கி விடக்​கூ​டாது என்​பதை வலி​யுறுத்தி சென்னை சைபர் குற்றக் காவல்துறையினர்  விழிப்​புணர்வு குறும்​படம் வெளி​யிட்​டுள்ளனர். இந்த காணொலியில் திரைப்பட குணச்​சித்​திர நடிகர் காளி வெங்​கட் நடித்​துள்​ளார்.

அதில், குறைந்த முதலீட்​டில் இரட்​டிப்பு லாபம் பெறலாம்’ எனக்கூறி பொது​மக்​களை மோசடி நபர்கள் நம்ப வைக்​கின்​றனர்.

அதை நம்பி ஏராளமானோர் தங்​கள் நண்​பர்​கள், உறவினர்களிடம் கடன் பெற்று முதலீடு செய்துபணத்தை பறி​கொடுக்​கின்​றனர்.

பின்​னர், வாங்​கிய கடனை திரும்ப செலுத்த முடி​யாமல் தற்​கொலை செய்யும் நிலைக்கு கூட சிலர் செல்​கின்​றனர்.

எனவே, யாரும் போலி​யான தகவல்​களை நம்ப வேண்​டாம்.என்ற எச்​சரிக்​கையை இந்த குறும்​படம் மூலம் காவல்துறையினர் வெளிப்​படுத்​தி உள்​ளார்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *