ஜாதி ஒழிய வேண்டும்? புத்தக அறிமுக கருத்தரங்கம்

1 Min Read

தூத்துக்குடி, அக். 27- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 44ஆவது நிகழ்ச்சியாகப் புத்தக அறிமுக உரை நடைபெற்றது. 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் கோ.இளமுருகு தொடக்கவுரையாற்றினார். தி.மு.க. இலக்கிய அணி மாவட்டத் துணை அமைப்பாளர் மோ.அன்பழகன் முன்னுரையுரையாற்றினார்.

அறிமுக உரையாகத் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய “ஜாதி ஒழிய வேண்டும?” என்ற புத்தகத்தின் கருத்துகளை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ் விளக்கி உரையாற்றினார். இறுதியாக உண்மை வாசகர் வட்டச் செயலாளர் மா.பால்ராசேந்திரம் நிறைவுரையாற்றினார். சி.முருகராசா நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. கோ.முருகன், கி.கோபால்சாமி, சு.காசி, பொ.போஸ், மு.பாலமுருகன், க.சவுந்தரம், க.குமரேசன், கி.கலைச்செல்வன், வழக்குரைஞரணி மாவட்டச் செயலாளர் இ.ஞா.திரவியம், அ.பாத்தசாரதி, முத்துமனோகர், அசோககுமார், த.செல்வராஜ் ஆகியோர் வருகை தந்து கருத்தினைக் கேட்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *