ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் அலட்சியம் இரத்தமாற்று சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்.அய்.வி. பாதிப்பு

1 Min Read

புதுடில்லி, அக்.27 ஜார்கண்ட் அரசு மருத் துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்.அய்.வி. தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் ரத்தம் மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் அதில் ஒரு குழந்தையின் பெற்றோர், ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எச்அய்வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப் பட்டதால் எச்அய்வி பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று முன் தினம் (25.10.2025) குற்றம் சாட்டினர். புகாரைத் தொடர்ந்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான அய்ந்து பேர் குழு அந்த மருத்துவ மனைக்கு விரைந்தனர்.

நேற்று (26.10.2025) அவர்கள் நடத்திய ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்.அய்.வி. தொற்று இருப்பது கண்டறி யப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 5 குழந்தை களுக்கு எச்அய்வி பாதிப்பு உறுதியானது.

தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மோச மான ரத்தம் செலுத் தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விசா ரணையின்போது ரத்த வங்கியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன என் றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தலசீமியா நோய்க்காக இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அலட்சியத்தால் அவர்களுக்கு எச்அய்வி பாதித்துள்ளது அம்மாநி லத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரத்த வங்கியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *