பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுக்க புதிய அணை ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

2 Min Read

காபூல், அக்.26- ​பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும் இடையே கடும் சண்டை நடை​பெற்று வரு​கிறது. கத்​தார் நாட்​டின் சமரசத்​தின்​பேரில் கடந்த 19ஆம் தேதி சண்டை நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. எனினும் இரு நாடு​களின் எல்​லைப் பகு​தி​களில் தொடர்ந்து பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது.

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் நாடு​களில் குனார் நதி பாய்​கிறது. இந்த நதி​யின் நீளம் 480 கி.மீ. ஆகும். நதி​யின் சுமார் 70 சதவீத தண்​ணீரை பாகிஸ்​தான் பயன்​படுத்தி வரு​கிறது. இதை தடுக்க குனார் நதி​யில் புதிய அணையை கட்ட ஆப்​கானிஸ்​தான் அரசு முடிவு செய்​திருக்​கிறது.

இதுகுறித்து ஆப்​கானிஸ்​தான் நீர்​வளத் துறை அமைச்​சர் முல்லா அப்​துல் லத்​தீப் மன்​சூர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “கு​னார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும். இந்த நதி​யின் மீது ஆப்​கானிஸ்​தான் மக்​களுக்கு முழு உரிமை இருக்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

ஆப்​கானிஸ்​தான் நீர்​வளம், எரிசக்தி துறை செய்​தித் தொடர்​பாளர் மதி​யுல்லா அபித் கூறிய​தாவது: குனார் நதி​யில் புதிய அணையை கட்ட திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​கான களஆய்வு நடத்​தப்​பட்​டு, விரி​வான திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்டு இருக்​கிறது. புதிய அணை​யின் மூலம் ஆப்​கானிஸ்​தானில் 1,50,000 ஏக்​கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 45 மெகா​வாட் மின்​சா​ர​மும் உற்​பத்தி செய்​யப்​படும். இந்த அணை​யால் நாட்​டின் உணவு தானிய உற்​பத்​தி, மின் உற்​பத்தி கணிச​மாக அதி​கரிக்​கும்.

குனார் நதி தொடர்​பாக ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தான் இடையே எந்த ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை. எனவே எவ்​வித பிரச்​சினை​யும் இன்றி நதி​யில் பிரம்​மாண்ட அணையை கட்​டு​வோம். பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீர் தடுத்து நிறுத்​தப்​படும். இவ்​வாறு மதி​யுல்லா அபித் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ஆப்​கான் அரசு​வட்​டாரங்​கள் கூறுகையில்,

‘‘அண்​மை​யில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் மூண்​டது. இதன்​காரண​மாக சிந்து நதி ஒப்​பந்​தத்தை இந்​தியா ரத்து செய்​தது. இதே பாணி​யில் குனார் நதி​யில் புதிய அணையை கட்டி பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க உள்​ளோம்’’ என்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *