‘குஜராத்திற்கு வழங்கியதில் ஒரு சதவீதத்தைக் கூட பிரதமர் மோடி பீகாருக்கு வழங்கவில்லை!’ தேஜஸ்வி குற்றச்சாட்டு

1 Min Read

பாட்னா, அக்.26 பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை எதிர்பார்ப்பதாக தேஜஸ்வி குற்றம் சாட்டினார்.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் நேற்று (25.10.2025) பீகாரில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியபோது, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அவர்களின் தலை வர்கள் பிணையில் வெளியே வந்தனர் என்றும் விமர்சித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சு குறித்து பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகார் மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் உள்ளனர் என்றும், பீகாரில் தற்போதைய சூழ்நிலை மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பீகாருக்கு பிரதமர் மோடி என்ன செய்துள்ளார்? என கேள்வி எழுப்பிய தேஜஸ்வி, குஜராத்தில் தொழிற் சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை எதிர்பார்ப்பதாக குற்றம்சாட்டி னார். மேலும், குஜராத்திற்கு வழங்கியதில் ஒரு சதவீதத்தைக் கூட பீகாருக்கு பிரதமர் மோடி வழங்கவில்லை என தேஜஸ்வி குற்றம்சாட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *