செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய மாநில அளவிலான “என் பள்ளி என் பெருமை” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி து.அழகுதரணி பங்குப்பெற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரிடமிருந்து பாராட்டுச் சான்றினையும் பதக்கத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.
